அரசு பொது காப்பீட்டு நிறுவனமான ‘தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்’ நிறுவனம் சார்பில், புயலால் ஏற்பட்டுள்ள பொருள், வாகன சேதங்களுக்கு இழப்பீடு பெறுவதற்கு வசதியாக சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னை அடையாறு, தாம்பரம், வேளச்சேரி, பூந்தமல்லி, அம்பத்தூர் மற்றும் புரசைவாக்கம் ஆகிய இடங்களில் ‘தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்’ அலுவலகங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

எனவே, பாலிசிதாரர்கள் இழப்பீடு கோருவதற்கு [email protected] என்ற மின்னஞ்சலில் தெரியப்படுத்தலாம். மேலும், www.newindia.co.in என்ற இணையதளத்தில் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.