போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பலரும் பயன்படுத்தும் ரேபிடோ பைக் டாக்ஸி சேவையில் பயணித்த பெண் ஒருவர், ஓட்டுநரின் துருதிஷ்டமாக ஓட்டத்தின் காரணமாக விபத்தில் சிக்கியுள்ளார். இந்த சம்பவம் சம்பந்தப்பட்ட வீடியோவை பிரியங்கா என்ற இளம் பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதில், ரேபிடோ ஓட்டுநர் தவறான பாதையில் அதிவேகமாக பைக் ஓட்ட, பைக் திடீரென கவிழ்ந்து விபத்துக்கு காரணமானது. அதிர்ஷ்டவசமாக இருவருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை.

 

View this post on Instagram

 

A post shared by Priyanka | Artist (@bhangrabypahadan)

இந்த வீடியோவில், ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்ததும், ஓட்டுநரின் நடவடிக்கைகள் பயத்தை ஏற்படுத்தியதையும் பிரியங்கா வெளிப்படையாக பதிவு செய்துள்ளார். “நான் உங்களை நம்பினேன், ஆனால் அந்த நம்பிக்கையை உடைத்துவிட்டீர்கள்,” என்ற கருத்துடன், தனது அனுபவத்தை உணர்வுபூர்வமாக பகிர்ந்துள்ளார். அந்த நேரத்தில் ரீல் பதிவு செய்து கொண்டிருந்ததால், முழு விபத்தும் வீடியோவில் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

விபத்துக்குப் பிறகு, பிரியங்கா ஓட்டுநருக்கு சம்பளம் கொடுத்து இடத்தைவிட்டு சென்றதாகவும், தானாக அலுவலகம் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ரேபிடோ நிறுவனம் பதிலளித்து, “நீங்கள் நலமாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்” என கூறியுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பும் இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.