என்னுடைய வீட்டிற்கு வேலைக்கு வரும் ஆண்களுக்கு 500 ரூபாய் சம்பளத்துடன் குவாட்டர் அளிப்பதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். வேலைக்கு வருபவர்களுக்கு அளிப்பதற்காக வீட்டில் பெட்டி பெட்டியாக மது வாங்கி வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  தமிழக அரசு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள். ஒரு நாளைக்கு எவ்வளவு தம்பி ?  முப்பது ரூபாய்.  ஒரு நாளைக்கு எவ்வளவு 30 ரூபாய் சம்பாதிக்க முடியாத அளவுக்கு எங்க ஆத்தாளை..   பிச்சைக்காரியா ஆக்கி வச்சிருக்கீங்க.

தம்பி எங்க  வீட்ல ஒரு நாளைக்கு 500 ரூபா களை எடுக்குறதுக்கு எங்க அம்மா கொடுக்கிறாங்க…  போடுடா  அம்மாக்கு போனை என்று சொல்லிய சீமான்,  கத்தரிக்காய், வெண்டைக்காய்,  தக்காளி,  பறிக்க ரூ.500 கொடுக்கிறேன்.

அது போக ஆம்பளையா இருந்தா குவாட்டர் கூட கொடுக்கிறேன். சீமான்  வீட்டுக்கு போனால்  குவாட்டர் கொடுப்பாங்க. எங்க அம்மா சொல்றா…. குவாட்டர் கொடுத்தா தான் வராங்க. அதான் அப்படி ஆயிடுச்சு. ஒரு குவாட்டர் கொடுத்தா வேலைக்கு ஆள்வாறான். இல்லன்னா 100 நாள் வேலைக்கு போயிட்டுறான். வேலைக்கு வருபவர்களுக்கு அளிப்பதற்காக வீட்டில் பெட்டி பெட்டியாக மது வாங்கி வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.