இன்று காலை 9.40 மணியளவில் கேரள மாநிலம் கொச்சி அருகே களமச்சேரி பகுதியில் கிறிஸ்துவ கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அந்த கூட்டத்தினிடையே மூன்று பாம் வெடித்தது.  இது தொடர்பாக கேரள காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு, டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வெடித்ததாக உறுதி செய்தனர்.  இந்த நிலையில் இந்த வெடிகுண்டை வெடிக்க வைத்தது யார் ?  என்பது குறித்த விசாரணை என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சம்பவம் நடந்த பகுதியில் இருந்து நீல கலர்  வேகமாக சென்ற காட்சியை வைத்து சம்மந்தப்பட்ட  நபரை கண்டுபிடிக்கும் பணியில் கேரளா காவல்துறை தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில் களமச்சேரி காவல் நிலையத்தில் தற்போது ஒருவர் நான் தான் இந்த வெடிகுண்டை வெடிக்க வைத்ததாக  கூறி உள்ளார். இந்த நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.