சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூரை சுற்றி இருக்கும் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு கும்பலை சேர்ந்தவர்கள் வட மாநிலத்தவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி அம்பத்தூர், கொரட்டூர், பட்டாளபாக்கம் ரயில் நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது ஒரு பெண் உட்பட 3 பேர் மூட்டை மூட்டையாக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் நெமிலிச்சேரியை சேர்ந்த சதாசிவம், வியாசர்பாடியை சேர்ந்த தீனா(29), அவரது மனைவி கௌசல்யா(27) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்து , 24 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.