கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை பகுதியில் மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கிளாக்காடு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அந்த விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த பொன்னுச்சாமி என்பதும் சட்ட விரோதமாக கஞ்சாவை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து பொன்னுசாமியை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் அவரிடம் இருந்த 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.