தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் கலை திறனை ஊக்குவிக்கும் வகையில் கலைத்திருவிழா நடத்தப்பட்டுள்ளது. இதில் காவடியாட்டம், கும்மியாட்டம், குதிரை ஆட்டம், இசைக்கருவிகள் வாசித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இந்நிலையில் கிணத்துக்கடவில் நடைபெற்ற வட்டார அளவிலான போட்டியில் 3 இசைக்கருவிகள் வாசிக்கும் பிரிவில் சேரிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படிக்கும் பார்வையற்ற மாற்றுதிறனாளி மாணவர் ஜேசன் டிரம்ஸ் வாசித்து முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். தொடர்ந்து மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு ஜேசன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவரை ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பாராட்டியுள்ளனர்.