கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. நேற்று முன்தினம் மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. ஒரு சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இந்நிலையில் தொடர் மழை காரணமாக விலவங்கோடு திருவட்டார் தாலுகாவில் தலா இரண்டு வீடுகளும், கிள்ளியூரில் ஒரு வீடும் இடிந்து விழுந்தது. மழை பெய்து கொண்டே இருப்பதால் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர்.