கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் 20 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். கடந்த 1-ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்று இளம்பெண் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இளம் பெண்ணை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர்.

ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து இளம் பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.