தொண்டர்கள் மத்தியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், எப்படி சிறுபான்மையினரால் பெரும்பான்மையினருக்கு பாதிப்பு ஏற்பட முடியும் ? இயல்பிலே முடியாது… அது இயங்கியலுக்கே முரண்பாடு…  சிறுபான்மை சக்தியாக இருக்கின்ற  எந்த ஒன்றும்,  பெரும்பான்மை சக்தியை அழித்துவிட முடியாது. இது இயங்கியல் போக்கு. ஆனால் அவர்கள் என்ன பரப்புகிறார்கள் என்றால் ? பெரும்பான்மை இந்துக்களுக்கு ஆபத்து.

நாளடைவில் இவர்கள் மதமாற்றத்தை வெற்றிகரமாக நடத்தி,  இந்தியாவையே இஸ்லாமிய நாடாக மாற்றப் பார்க்கிறார்கள். இது அவர்கள் பரப்புகிற யோகத்தின் அடிப்படையிலான வதந்திகள்,  அவதூறுகள். அப்படி எல்லாம் மாற்றி விட முடியாது. இந்த நாட்டில் இஸ்லாமும், கிறித்துவமும் திட்டமிட்டு மதம் மாற்றங்களை செய்கின்றது என்பது ஒன்று.

இரண்டாவது நாம் தெய்வமாக வணங்கும் பசுவை இவர்கள் மாமிசம் உண்ணுகின்ற ஜடமாகப் பார்க்கிறார்கள், பசுவை அவமதிக்கிறார்கள், அடித்து கொன்று, சமைத்து தின்கிறார்கள்.  பசுவுக்கு எதிரான நிலைப்பாட்டை முஸ்லிம்கள் எடுக்கிறார்கள் என்று முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பை விதைக்கிறார்கள். அவர்களே இனி இந்த பசு மாட்டால் பயனில்லை, பால் கரக்காது என்ற பிறகு…. அடிமாடு என்கிற நிலைக்கு வந்த பிறகு சந்தையிலே விற்று விடுகிறார்கள்.

அந்த மாடு மறுபடியும் சினையாகாது… கன்று இனாது… பால் சுரக்காது. அதனால் அவர்களுக்கு அது பயன்படாது. அதை அவர்களால் பராமரிக்க முடியாது. ஆகவே அடிமாடு என்ற நிலைக்கு ஆன பிறகு தான்,  பசு மாடாக இருந்தாலும்…. எந்த மாடாக இருந்தாலும்…. அவர்கள் சந்தைக்கு விடுகிறார்கள். ஆனால் இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் ? சினையும் கன்றுமாக இருக்கிற பசுமாட்டை… ஏதோ அவமதிப்பது போலவும்… அடித்துக் கொன்று கறி சமைத்த தின்பது போலவும்… பசு தெய்வம் என்கிற நிலையில் இருந்து…. அதனை அவமதிக்கிறார்கள் என்றும்… அவதூறு பரப்புகிறார்கள் என தெரிவித்தார்.