பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்வோர் நாளை செப்டம்பர் 13 முதல் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14ஆம் தேதி போகி பண்டிகையுடன் தொடங்குகின்றது. இதனை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது.

நாளைய தினம் முன்பதிவு செய்வோம் ஜனவரி 11ஆம் தேதி பயணம் செய்யலாம். செப்டம்பர் 14ஆம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 12ஆம் தேதியும் செப்டம்பர் 15ஆம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 13ஆம் தேதியும் செப்டம்பர் 16ஆம் தேதி முன்பதிவு செய்போர் ஜனவரி 14-ஆம் தேதியும் செப்டம்பர் 17ஆம் தேதி முன்பதிவு செய்வோம் ஜனவரி 15ஆம் தேதியும் செப்டம்பர் 18ஆம் தேதி முன்பதிவு செய்வோம் ஜனவரி 16ம் தேதி செப்டம்பர் 19ஆம் தேதி முன்பதிவு செய்வோம் ஜனவரி 17ஆம் தேதியும் பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.