உயர்ந்தவர்,  தாழ்ந்தவர் என வேதத்தில் குறிப்பிடவில்லை நாம் அனைவரும் ஒன்றுதான் என்றே உள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு நிகழ்விலும் ஜாதிய வன்கொடுமை நடப்பது வேதனை அளிக்கிறது. குடிநீரில் மனிதக் கழிவு, மாணவர்கள் கையில் சாதிக்கயிறு என ஜாதியை வன்கொடுமை தலை தூக்கி விட்டன. பட்டியலின பஞ்சாயத்து தலைவர் இந்துமதியை பதவி ஏற்க விடாமல் செய்கின்றனர். சமூக நீதி என நாம் பேசி வருகிறோம். ஆனால் சமூக இழிவு நிலை தான் தொடர்கிறது என ஆளுநர் தெரிவித்துள்ளார்.