தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜாதிவாரி மக்கள் தொகை நடத்த கோரி தமிழக அரசிடம் அளித்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தை மனுதாரர்கள் அணுகி இருந்தார்கள். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இது தொடர்பான உத்தரவினை பிறப்பித்து இருக்கிறது.  தமிழக அரசுக்கு அதுபோன்ற உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது.

ஏனென்றால் அது மாநில அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என்ற ஒரு காரணத்தையும் தெரிவித்து இருக்கிறார்கள். எந்த அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது ஆளும் அரசின் தனிப்பட்ட அதிகார வரம்புக்கு உட்பட்டது என்றும் நீதிமன்றம் விளக்கம் அளித்து இருக்கிறது.