மதுரை மாவட்டத்திலுள்ள வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால் திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

இந்நிலையில் மதுரை யானைகல் ஏ.வி பாலத்தின் கீழே வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது. இதனால் ஒபுளா படித்துறை, செல்லூர் சாலை, கோரிப்பாளையத்தில் இருந்து அரசு மீனாட்சி கல்லூரி வழியாக செல்லும் சேவை சாலை, வைகை வடகரை ஆழ்வார் புரம் சாலை ஆகிய பகுதிகளில் போலீசார் தடுப்புகளை வைத்துள்ளனர்.