தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் ராணுவம், பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை மழை வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் இருக்கும் குளங்கள், கன்வாய்கள் 100% நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால் வயல்கள், கிராமங்கள், தோப்புகளை வெள்ளம் சூழ்ந்து பல்வேறு கிராமங்கள் தனித்தீவுகளாக காட்சியளிக்கிறது.