நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 13-வது கொண்டை ஊசி வளைவு அருகே ஒரு பாறை உருண்டு விழுந்தது. அப்போது அந்த வழியாக ஒரு கார் சென்றது.

அதிர்ஷ்டவசமாக கார் வேகமாக சென்றதால் அதிலிருந்த 5 பேரும் உயிர் தப்பிவிட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த பாறையை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.