பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நனை மேற்கு தெருவில் அழகப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அகிலன் பெங்களூரில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி அகிலன் தனது நண்பர்களுடன் ஒகேனக்கலுக்கு சுற்றுலா சென்றார். இதனையடுத்து காவிரி ஆற்றில் குளிக்கும் போது அகிலன் கரை மீது ஏறி குதித்த போது தலையில் படுகாயம் ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கினார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அகிலனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்து டாக்டர்கள் அகிலன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.