காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு சாரல் மழை பெய்கிறது. இதனால் நீர்நிலைகளுக்கு வரும் தண்ணீர் அதிகரித்துள்ளது. நேற்று காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

இதனால் பழைய ரயில் நிலையம், ராஜாஜி மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையில் மழை நீர் தேங்கியால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். ஆனால் உத்தரமேரூர் பகுதியில் லேசான மழை விட்டு விட்டு பெய்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.