திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த ஒரு வரமாக இரவு நேரங்களில் அதிகமான பனிப்பொழிவு நிலவுகிறது. மேலும் காலை மிதமான வெயில் அடிக்கிறது. இந்நிலையில் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு பனிமூட்டம் சூழ்ந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி வாகனங்களை இயங்குகின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் ஏரிச்சாலை பகுதியில் மிதிவண்டி, குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர். சாரல் மழையும், பனி பொழிவும் மாறி மாறி நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.