திருச்சி மாவட்டத்தில் உள்ள கிழவாளாடி பகுதியில் ஸ்டீபன் தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரேஷன் கடையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு மேரி என்ற மனைவி உள்ளார். இவர் ஸ்ரீரங்கம் பகுதியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவரும் இரு சக்கர வாகனத்தில் அரியமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில் காவிரி பாலம் அருகே சென்ற போது எதிரே வந்த ஆட்டோ இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கணவன் மனைவி இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்டீபன் தாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.