கள்ளக்குறிச்சி மாவட்டம் உள்ள அகரகோட்டாலம் கிராமத்தில் வெற்றி செல்வன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு வெற்றி செல்வனுக்கும் ஷர்மிளா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. தற்போது ஷர்மிளா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷர்மிளா தனது தாய் வீடான ராயபுரம் கிராமத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஷர்மிளா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஷர்மிளாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஷர்மிளா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.