கரூர் மாவட்டத்திலுள்ள தாந்தோணி மலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிலர் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.

இதனால் சூதாட்டத்தில் ஈடுபட்ட குணசேகரன், விஜயன், சிம்சன் ஆகிய மூன்று பேரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த பணம் மற்றும் சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்தனர்.