தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் தற்போது அகிலன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ள நிலையில் அகிலன் திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், படத்திற்கு தணிக்கை குழு யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. அகிலன் திரைப்படத்தின் டிரைலர் வீடியோ நேற்று வெளியானது.

இந்நிலையில் அகிலன் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது நடிகர் ஜெயம் ரவி பேசிய விஷயம் தற்போது வைரலாகி வருகிறது. அவர் பேசியதாவது, அகிலன் திரைப்படம் துறைமுகத்தை மையப்படுத்தி மாஃபியா படமாக உருவாகியுள்ளது. இந்த படப்பிடிப்பு கஷ்டப்பட்டு நடந்தது. பெரிய முயற்சி எடுத்து படமாக்கிய படக்குழுவினருக்கு என்னுடைய நன்றிகள். நடுக்கடலில் ஒரு சண்டை படமாகியுள்ளது. வெயில் மற்றும் உப்பு தண்ணீர் என அதை கஷ்டப்பட்டு எடுத்தோம். என்னுடைய கதாபாத்திரம் எதிர்மனையானதாகவும் வித்தியாசமானதாகவும் இருக்கும். படம் நன்றாக வந்துள்ளது. மேலும் நான் சினிமாவில் எந்த நடிகருக்கும் போட்டி இல்லை. எனக்கு நான்தான் போட்டி என்று கூறினார். அதன் பிறகு பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் சிறப்பான முறையில் வந்துள்ளதாகவும் கூறினார் ‌