இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்பது பாலிவுட் நடிகைகளுக்கும் பெரிய ஆசை மற்றும் கனவாக உள்ள நிலையில், சமீபத்தில் அவர் பாலிவுட் நடிகை கஜோலை ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க அழைப்பு விடுத்தார். ஆனால் மணிரத்னம் சொன்ன தேதிகளில், ஏற்கெனவே ஒரு அறிமுக இயக்குனரின் படத்தில் நடிப்பதற்காக முன்கூட்டியே கொடுத்து விட்டதாக கூறியுள்ளார்.

அந்த அறிமுக இயக்குனர் வேறு யாருமல்ல, தற்போது பாலிவுட் சினிமாவின் பிரபலமாக வலம் வரும் இயக்குனர் கரண் ஜோஹர் தான். இவர் முதன்முறையாக இயக்குனராக அறிமுகமான ‛குச் குச் ஹோத்தா ஹை’ என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்புக்கொண்ட கஜோல், முன்பிருந்து
இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்றும் இந்த படத்திற்காக, மணிரத்னம் பட வாய்ப்பை கஜோல் மறுத்துள்ளார்.

மணிரத்னம் படத்தில் ஒருமுறையாவது நடித்துவிட வேண்டும் என்பது தனது கனவு என்று கஜோல், இயக்குனர் கரண் ஜோஹரிடம் முன்பு கூறியுள்ளார். உடனே அவரும் மணிரத்னம் படத்தில் நடித்துவிட்டு வருமாறும், பிறகு தனது படத்தை தொடங்கலாம் என்றும் கூறியுள்ளார். ஆனால்  இதனை மறுத்த கஜோல், கரண் ஜோஹர் படத்தில் தான் நடித்துள்ளார். இந்த தகவலை சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் இந்த இயக்குனர் கூறியுள்ளார்.