இந்தியாவின் முன்னணி வங்கியான எச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மார்ச் 6ம் தேதி நாளை 12 AM மணி முதல் 5.00 AM வரை வங்கியின் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு சேவைகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கியின் தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக 5 மணி நேரங்கள் இந்த சேவைகள் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் அதற்கு ஏற்ப திட்டமிட்டு கொள்ளவும்.