வங்கிகள் தங்களுடைய கேஒய்சி அமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஏற்கனவே ரிசர்வ் வங்கி மத்திய அரசுடன் விவாதித்து வருகின்றது. குறிப்பாக ஒரே போன் நம்பரில் வெவ்வேறு கணக்குகளை வைத்திருப்பவர்கள் அல்லது கூட்டு கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் மீண்டும் ஒருமுறை கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டி இருக்கும். மேலும் பல்வேறு வகையான ஆவணங்களுடன் பல கணக்குகளை தொடங்கியவர்கள் கூடுதல் தகவல்களை வங்கிகளுக்கு அளிக்க வேண்டி வரும் என தகவல் வெளியாகி உள்ளது.