உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள தௌராலா பகுதியில் திங்கள்கிழமை ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. டெல்லியில் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் இளம் பெண்ணும் இளைஞரும் காதலித்து வந்தனர். பெரியோர்கள் சம்மதத்துடன் இவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தது. இந்த நிலையில், திருமண நாளான்று மணமகன் ஊர்வலம் வர தாமதமானதால், புது ஜோடிகள் இடையே சண்டை ஏற்பட்டது.

பின்னர் மணமகளை மணமகன் அனைவர் முன்னிலையிலும் அறைந்துள்ளார். ஆத்திரமடைந்த மணமகளும் அவரை திருப்பி அடித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு, மணமக்கள் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டனர். தொடர்ந்து திருமணம் நின்று போனது.