செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,  சாதி ஒழிப்பு போராளி தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளில் விடுதலை சிறுத்தை கட்சி தலைமையகத்தில் அவருடைய திருஉருவ  படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலர் தூவி வீரவணக்கம் செலுத்தி இருக்கின்றோம். விடுதலைகள் கட்சி சார்பில் ஏராளமானவர்கள் பரமகுடி செல்லுரிலே அவருடைய நினைவிடத்திற்கு சென்று வீரவணக்கம் செலுத்தி இருக்கின்றார்கள்.

தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு தளபதி ஸ்டாலின் அவர்கள் தியாகி இமானுவேல் சேகரன் அவரின் சமூக மாற்றத்திற்கான பங்களிப்பை போற்றும் வகையில் அவருடைய பெயரில்  திருஉருவச் சிலையுடன் கூடிய  மணி மண்டபம் ரூபாய் 3  கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என மாண்புமிகு முதல்வர்கள் அறிவிப்பு செய்து இருக்கிறார்.

விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் இதனை வரவேற்று பாராட்டுவதோடு மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம். விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் நீண்ட காலமாக இந்த கோரிக்கையை எழுப்பி வந்திருக்கிறோம்.  சட்டப்பேரவையிலும் இமானுவேல் சேகரன் அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும், அவருடைய பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று எமது சட்டமன்ற உறுப்பினர் பாபு பேசி இருக்கிறார்.

பரவலாக இந்த கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வந்தது. மாண்புமிகு முதல்வர் அவர்கள் இந்த கோரிக்கையை ஏற்று இன்றைக்கு மணி மண்டபம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது.  விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பிலே தமிழக அரசுக்கு…  மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம் என தெரிவித்தார்.