DMK சார்பில் நடைபெற்று வரும் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டில் அனைத்து குடும்பங்களையும்,  அனைத்து மாணவர்களையும், அனைத்து பெற்றோர்களையும், ஆசிரியர்களையும்  சந்தித்து இந்த கையெழுத்தை நாம் பெற வேண்டும். வெறும்  எண்ணிக்கைக்காக மட்டும் இல்லாமல் நீட் தேர்வால்  ஏற்படுகின்ற பாதிப்புகளை எடுத்துச் சொல்லி,  பொதுமக்களின் உடைய கையெழுத்துக்களை பெற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

நீட் தேர்வால் தங்களுடைய பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோரை சந்தித்து,  கழகத்தின் முயற்சியை எடுத்துச் சொல்லுங்கள். அவர்களையும் கையெழுத்திட செய்யுங்கள். ஒருவரிடம் கையெழுத்து வாழும்பொழுது அவர்களிடம் இன்னும் ஒரு 10 பேரிடம் கையெழுத்து வாங்குகின்ற நிலையை ஏற்படுத்துங்கள்.  நீட்டினுடைய தீமைகளை எடுத்து கூறுங்கள்.

கல்லூரி நிர்வாகிகளிடம் அனுமதி வாங்கி,  நிர்வாகத்தினரிடம்  அனுமதி வாங்கி கல்லூரிகளுக்கு போய்,  மாணவர்களிடம் நீட்டிற்கு எதிராக கையெழுத்தையும் நாம் வாங்க வேண்டும். ஏனென்றால் மாணவர்களுக்கு நீட் தேர்வால் ஏற்படக்கூடிய தீமைகள் நன்றாகவே தெரியும். அவர்களிடம் நீட் ஒழிப்பிற்கு திமு கழகம்  செய்து வரும் ஒவ்வொரு பணியும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வால் இன்னொரு சாவு ஏற்படக்கூடாது என்பதை   நாம் நடத்திக் காட்ட வேண்டும். இந்த கையெழுத்தை பெறுவதற்கு நாம் 2 வசதிகளை செய்து கொடுத்துள்ளோம். ஒன்று இணையதள மூலம்  கையெழுத்திடலாம். மற்றொன்று போஸ்ட் கார்டு மூலமாக கையெழுத்திட்டு அதனை வழங்கலாம். இதற்காக வடிவமைக்கப்பட்ட இணைய தளத்திற்கு சென்று உங்களுடைய பெயர்,  செல்போன் எண்,  மாவட்டம்,  தொகுதி ஆகியவற்றை பதிவிட்டு,  டிஜிட்டல் முறையிலும் கையெழுத்திடலாம். அதேபோல போஸ்ட் கார்டில் நீட் ஒழிப்பிற்கான கையெழுத்திட்டு, அதனையும் திருப்பி அளிக்கலாம்.

ஒன்றிய அரசு தொடர்ந்து நம்மையும்,  நம்முடைய மாநில அரசினுடைய முயற்சிகளையும் அலட்சியம் செய்து கொண்டே இருந்தால் ? அடுத்து தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டம் மாதிரியான ஒரு வீரமிக்க போராட்டத்தை தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறோம். இதை நான் இங்கு ஒன்றிய அரசுக்கு ஒரு எச்சரிக்கையாகவே நான் இங்கு கூற விரும்புகின்றேன். கையெழுத்து இயக்கம் நடத்துகின்றோம்.

இதன் மூலம் 50 லட்சம் கையெழுத்துக்கள் வாங்குகிறோம் என்றால் ? 50 லட்சம் பேனாக்கள் உயர்ந்து நிற்கின்றது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த 50 லட்சம் பேனாக்களுடைய  மொத்த உருவம் தான் நம்முடைய முத்தமிழறிஞ்சர் டாக்டர் கலைஞர் உடைய அந்த ஒற்றைப் பேனா. பேனாவாலும்,  தன்னுடைய கையெழுத்தாலும் தமிழ்நாட்டின் திசை வழியை மாற்றி அமைத்த மூத்தமிழர் கலைஞர் அவர்களின்  வழித்தோன்றிகள் தான் நாம் என்பதை நீங்கள் உணர வேண்டும் என தெரிவித்தார்