வெளிநாடுகளில் தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் இருக்கிறது. இந்த வழக்கம் இந்தியாவிலும் குஜராத்தை சேர்ந்த ஒரு பெண்ணால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் அர்ஜென்டினாவை சேர்ந்த சோஃபி மௌரே (25) என்ற இளம் பெண் கடந்த பிப்ரவரி மாதம் 20-ம் தேதி தன்னைத்தானே திருமணம் செய்துள்ளார். அதன் பிறகு தன்னுடைய திருமணத்திற்கு ஆடை மற்றும் கேக் போன்றவற்றை தானே தயார் செய்வதாக சோஃபி அறிவித்தார்.

தன்னுடைய நிறுவனத்தில் 24 மணி நேரத்தை செலவிட்ட சோஃபி திடீரென ஒரு பதிவை வெளியிட்டார். அதாவது பிப்ரவரி 21-ஆம் தேதி திருமணம் முடிந்த 24 மணி நேரத்தில் நான் என்னை விவாகரத்து செய்யப் போகிறேன் என்று சோஃபி பதிவிட்டுள்ளார். மேலும் இது என் வாழ்க்கையின் மிக மோசமான நாள் என்றும் சோஃபி விவாகரத்து செய்வது குறித்து பதிவிட்டு இருந்தார்.