மடகாஸ்கர் அருகே மயோட் ஆற்றுப்பகுதியில் படகு கவிழ்ந்து மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது இந்த விபத்தில் மடகாஸ்கரில் இருந்து பிரான்ஸ் தீவான மயோட்டுக்கு சென்ற 22 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மொத்தம் 47 நபர்களை ஏற்றிச்சென்ற அந்த படகு மடகாஸ்கரின் வடக்கே அங்கொம் பொரோன கடல் பகுதியில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இதனிடையே படகு விபத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.