காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள எஸ்.எஸ்.கே.வி மேல்நிலைப் பள்ளியில் 23-வது ஆண்டு புத்தக கண்காட்சி விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு எஸ்.எஸ்.கே.வி கல்வி குழுமங்களின் தலைவர் சி.கே ராமன் தலைமை வகித்தார். இதனையடுத்து காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் புத்தக கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.

முன்னதாக எஸ்.எஸ்.கே.வி மெட்ரிகுலேஷன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ஆர்.விஜயலட்சுமி வரவேற்று பேசியுள்ளார். இந்த புத்தக கண்காட்சி விழாவில் ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். வருகிற 26-ஆம் தேதி வரை நடைபெற உள்ள புத்தக கண்காட்சியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்காக இடம் பெற்றுள்ளது.