உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் இருந்து ஒரு மனதைத் தொடும் வீடியோ வைரலாகியுள்ளது, அதில் ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒரு தெரு நாயிடமிருந்து குழந்தைகளை காப்பாற்ற பால்கனியில் இருந்து குதிப்பதைக் காணலாம். இந்த சம்பவம் நெட்டிசன்களை உணர்ச்சிவசப்படுத்தியுள்ளது.

 

மேலும் மக்கள் நாயின் விரைவான எதிர்வினை மற்றும் பாதுகாப்பு தன்மையைப் பாராட்டி வருகின்றனர். இந்த வைரல் வீடியோ ஒரு குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தது என்று கூறப்படுகிறது. வீடியோவில், ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் வீட்டின் பால்கனியில் அமைதியாக அமர்ந்து சாலையில் வருபவர்களையும் செல்வவர்களையும் பார்த்துக் கொண்டிருந்தது.

பின்னர் சில குழந்தைகள் சாலையின் குறுக்கே ஓடுகிறார்கள். ஒரு தெரு நாயும் அவர்களுக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருந்தது. இதைப் பார்த்ததும், ஜெர்மன் ஷெப்பர்ட் சுறுசுறுப்பாகி, எதுவும் யோசிக்காமல், பால்கனியில் இருந்து குதித்து தெரு நாயை நோக்கி ஓடுகிறது.

வீடியோவில் அது தெரு நாயை குழந்தைகளிடமிருந்து விரட்டுவதைக் காண்பீர்கள், இதன் காரணமாக குழந்தைகள் பாதுகாப்பாகிறார்கள். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.