செய்தியாளர்களிடம் பேசிய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஆரியம்,  திராவிடம் இது பற்றி எல்லாம் நம்ம பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற மாணவர்களை கேளுங்கள். திராவிடம் என்றால் என்ன ?  ஆரியம் என்றால் என்ன ? என்று கேளுங்கள். இவர்கள் எல்லாம் ஆரியத்தால் பாதிக்கப்பட்டு தான் இன்று பள்ளிக்கூடத்திலே திராவிட உணர்வோடு படித்துக் கொண்டிருக்கின்ற மாணவர்கள். இங்கே சர்ஜ் போன்ற இடங்களுக்கு வந்து இருப்பவர்களும் அவர்கள் தான்.

அதனால் இது எடப்பாடிக்கு  தெரியவில்லை என்றால் பெரிய ஆச்சரியமாக இருக்கு. கட்சியினுடைய பெயரே அண்ணா திராவிடம் முன்னேற்ற கழகம்.  அண்ணாவையும் அவருக்கு தெரியவில்லை என்று தெரிகிறது….. திராவிடமும் அவருக்கு தெரியவில்லை என்று தெரிகிறது…  இதற்கெல்லாம் போய் ஆராய்ச்சி பண்ண வேண்டும் என்றால்,  அதைவிட என்ன இருக்க முடியும் ?

இப்போ  6, 7, 8ஆவது புத்தகத்தில் இப்ப நம்முடைய சுதந்திரப் போராட்ட வீரர்கள்,  திராவிடத்தை பற்றி தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. இது தெரியாமல் அவர் எப்படி கட்சியில் உறுப்பினராக இருந்தால் கூட பரவாயில்லை….  அவர் கட்சிக்கு பொது செயலாளராக ஆகி உள்ளார். அண்ணா பெயரையும், திராவிடத்தின் பெயரையும் வச்சி இருப்பவர் சொல்கிறார் என்றால் ? அதைவிட வெட்கக்கேடு வேறு எங்கும்  இருக்க முடியாது. அதை நான் கண்டிக்கிறேன் என தெரிவித்தார்.