செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, திராவிட முன்னேற்ற கழகம் கூட கட் அவுட் வைப்பதில்லை. ஆட்சியாளர்கள் அதை பின்பற்றுகிறார்கள். ஒரு குழந்தை செத்துப்போச்சு.  கோயம்புத்தூரில்… சென்னையில் ஒன்னாச்சி…  ஹை கோர்ட் ஸ்ட்ரிக்டா  சொல்லிடுச்சு. நாளை காலை மெயில் போகும் டி.ஜிபிக்கு…

புரட்சித்தலைவி அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்டு, முதலமைச்சராகிய ஓபிஎஸ் அவர்கள் தலைமையில் தான் அமையும்.  அண்ணன் பண்ருட்டியார், கழக ஆலோசகர் உள்ளிட்ட அனைவரும் அதிலே கலந்து கொள்கின்றோம்.

மிக முக்கியமான அறிவிப்புகளை…  வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் என்ன செய்யப் போகிறோம் ? அடுத்த கட்ட நடவடிக்கை என்ன ?  என்பதை தமிழக மக்கள் ஆதரவோடு…  எதிர்பார்க்கின்ற விதத்தில் அன்றைய தினம் எங்களது அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் அறிவிக்கிறார்கள். ஒரு முக்கியமான கூட்டமாக இருக்கும் என தெரிவித்தார்.