கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மேடு கிராமத்தில் சுகுமார்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சொந்த வேலை காரணமாக சுகுமார் தனது நண்பரான சரண்ராஜ்(24) என்பவருடன் மடப்பட்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அங்கு வேலை முடிந்து மீண்டும் அவர்கள் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் சேமகோட்டை பகுதியில் சென்றபோது நள்ளிரவு நேரத்தில் வேலூர் நோக்கி சென்ற அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த சுகுமாரும், சரண்ராஜும் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபர்களின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.