கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ் அனுப்பம்பட்டு கிராமத்தில் சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த மே மாதம் 4-ஆம் தேதி சிலம்பரசனுக்கு அரசு ஊரைச் சேர்ந்த எம்.காம் பட்டதாரியான ரோஜா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பு சிலம்பரசன் 3 ஆண்டுகள் துபாயில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று இரவு கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த சிலம்பரசன் பிளேடால் தனது மனைவியின் கழுத்தை அறுத்து துடிக்க, துடிக்க கொலை செய்துள்ளார். பின்னர் நடந்த சம்பவத்தை கூறி கிள்ளை காவல் நிலையத்தில் சிலம்பரசன் சரணடைந்தார். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரோஜாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சிலம்பரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.