தொலைந்து போன அல்லது திருடு போன செல்போன்கள் தொடர்பாக புகார் அளிப்பதற்கு வேலூர் காவல் துறையினர் செல் ட்ராக்கர் என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளனர். இந்த செயலியில் தொலைந்து செல்போன் விவரங்கள் குறித்து புகார் அளித்தால் கண்டுபிடித்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 9486214166 என்ற whatsapp எண்ணுக்கு உரிமையாளரின் விவரத்துடன் ஐ எம் இ ஐ என்னை அனுப்பி புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் தொலைந்து போன செல்போன் குறித்து whatsapp அல்லது செயலி மூலமாக புகார் அளித்தால் மட்டும் போதும் என்றும் காவல் நிலையம் செல்லத் தேவையில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.