கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வீரப்பகவுண்டனூர் வடக்கு தோட்டம் பகுதியில் முருகராசு(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த மே மாதம் 24-ஆம் தேதி முருகராசுவுக்கு அஸ்மிதா(19) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. கடந்த மாதம் 18-ஆம் தேதி வயிற்று வலி காரணமாக அஸ்விதா தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அஸ்மிதா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அஸ்மிதாவின் தாய் சங்குமுது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் திருமணம் ஆன ஒரு மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.