விருதுநகர் அருகே ரயில்வே தலைமைக் காவலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டியைச் சேர்ந்த தலைமைக் காவலர் பாண்டியன், இன்று ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். ஏற்கெனவே நேற்றிரவு மதுரையில் 2 குழந்தைகளுடன் பெண் காவலர் ஒருவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அடுத்தடுத்த காவலர்கள் தற்கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.