தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கடந்த 15 ஆம் தேதி மகளிருக்காக 1000 ரூபாய் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் பலருடைய வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒருசிலருக்கு பணம் கிடைக்கவில்லை. இதனால் உரிமைத் தொகைத் திட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மேல்முறையீடு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. பலருக்கும் நிராகரிப்புக்கான காரணம் SMS வரவில்லை.

இதற்காக உருவாக்கப்பட்ட இணையத்திலும், இ-சேவை மையங்களிலும் சர்வர் பிரச்னை காரணமாக விண்ணப்ப நிலையை தெரிந்துக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மண்டல அளவில் சிறப்பு முகாம் நடத்த அரசு திட்டமிட்டு வருகிறதாம்.