மதுரை பெருங்குடியில் ஊருக்குள் புகுந்த மர்ம கும்பல் சிறுவன் உட்பட 5 பேரை சரமாரியாக வெட்டியுள்ளது. படுகாயமடைந்த 5 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன் பகையா? அல்லது சாதி பிரச்னையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று நடு இரவில் நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.