அன்புமணி கைதை கண்டித்து மேட்டூர் தொகுதி பாமக MLA சதாசிவம் உள்ளிட்ட அந்த கட்சியின் முக்கிய தலைவர்கள் நேற்று இரவு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், எந்த பயனும் இல்லை. இதனால், சதாசிவம் உள்ளிட்ட அனைவரையும் அதிரடியாக கைது செய்துள்ளனர்.