சென்னை பெரம்பூரில் அதிமுக பிரமுகர் இளங்கோவன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, சிறுவன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இபிஎஸ் ஆதரவாளரான இளங்கோவனை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட போலீஸார் கொலையில் தொடர்புடைய சஞ்சய், அருண், ஒரு சிறுவன் உள்பட 5 பேரை கைது செய்தனர். கைதானவர்களின் ஆட்டோ, பட்டாக்கத்திகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.