தமிழகத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் இன்று பணியை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டம், காலமுறை ஊதியம், ஆறு லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்,சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு 7500 ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழக முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. அதனால் இன்று அரசு அலுவலகங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சமீபத்தில் தமிழக அரசு எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.