பாகிஸ்தானில் தீவிரவாதிகள் மீண்டும் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில், பலுசிஸ்தானில் தீவிரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். இதனையடுத்து, பயங்கரவாதிகள் எல்லைப் படை வளாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், அப்போது துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் பல பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதை ராணுவ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.