பொதுவாக பேருந்து சேவையில் ஒரு ஓட்டுநர், ஒரு நடத்துநர் இருப்பது வழக்கம். ஆனால் ஓட்டுநர் இல்லாமல் பேருந்து இயங்கினால் எப்படி இருக்கும்.? ஆச்சரியமாக உள்ளதா? ஆம்  உலகிலேயே முதன்முறையாக ஓட்டுனர் இல்லாத தானியங்கி பேருந்து சேவை ஸ்காட்லாந்தில் தொடங்கப்பட்டுள்ளது. வாரத்திற்கு சுமார் 10,000 பேர் பயணம் செய்யும் திறன் கொண்டதாக இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 வரை சோதனை ஓட்டமாகவே இந்த பேருந்து இயக்கப்பட உள்ளது. வாகனத்தை கட்டுப்படுத்தக் கூடிய பாதுகாப்பு ஓட்டுநர், டிக்கெட் விற்பனையாளர்கள் என 2 பணியாளர்கள் பேருந்தில் இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

மேலும் பேருந்தை சுற்றி சென்சார்கள் பொருத்தப்பட்டு மணிக்கு 50 மைல் வேகத்தில் செல்லக்கூடிய அளவில் இந்த பேருந்துகள் வடிவமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. உலகிலேயே ஓட்டுனர் இல்லாமல் பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளது இதுதான் முதல் முறை என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.