பாகிஸ்தான் நாட்டில் ராவல்பிண்டி பகுதியில் இருந்து கில்கிட் நோக்கி நேற்று பயணிகளை ஏற்றுக்கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து மலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து நொறுங்கியது.

இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில்‌ ஈடுபட்டனர். இந்நிலையில் விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு  பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்தில் 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.