தென் அமெரிக்க நாடான பிரேசிலில் ரியோ கிராண்டே டோ சுல் மாகாணம் உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கும் நிலையில், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளது.

இந்நிலையில் அங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 29 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 60 பேர் மாயமாகியுள்ளனர். இவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதோடு, மீட்பு பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக அங்கு பல நகரங்களுக்கு அவசரநிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.