அமெரிக்க நாட்டில் உள்ள பார்க் சிட்டி என்ற நகர் அருகே உடா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் கௌரி டார்டன் ரிசின்ஸ் என்ற பெண்மணி தன்னுடைய கணவரை வோட்காவில் விஷம் கலந்து கொலை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கௌரி தன்னுடைய கணவர் எரிக் ரிசன்ஸை கடந்த வருடம் மார்ச் மாதம் வோட்காவில் விஷம் கலந்து கொடுத்து கௌரி கொலை செய்துள்ளார்.

இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் கணவர் இறந்த காலகட்டத்தில் துணையை இழந்த பிறகும் எப்படி குழந்தைகளை வைத்து மகிழ்ச்சியாக வாழ்வது என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். எரிக் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், வோட்காவில் மெல்ல மெல்ல கொல்லும் விஷம் கலந்து கொடுத்தது தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் கணவர் இறந்த மறுநாள் நண்பர்களுக்கு கௌரி பார்ட்டி வைத்துள்ளார். இந்த விஷயம் தற்போது வெளியில் தெரிய வரவே கௌரியை போலீசார் கைது செய்துள்ளனர்.